Sorting by

×

பெண் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்: நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி வேண்டுகோள்

சென்னை: ​வி​ராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை​போல நாம் அனை​வரும் பெண் கல்​வி, ஏழை மகளிர் வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்கு உதவ வேண்​டும் என்று சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி டி.​வி.தமிழ்ச்​செல்வி கூறி​னார். விராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை சார்​பில், பத்​மஸ்ரீ விருதுபெற்ற ஸ்த​பதி தேவ.​ரா​தா கிருஷ்ணனுக்கு பாராட்டு விழா சென்னை பெரி​யார் நகரில் நேற்று நடை​பெற்​றது. அறக்​கட்​டளை நிறு​வனர் முனைவர் பிரம்மஸ்ரீ கே.பி.​வித்​யாதரன் தலைமை வகித்​தார்.

சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி டி.​வி.தமிழ்ச்​செல்​வி,ஸ்த​பதி தேவ.​ரா​தாகிருஷ்ணனை கவுர​வித்​தார். தொடர்ந்​து, அறக்​கட்​டளை சார்​பில் ஏராள​மான பெண் பயனாளி​களுக்கு கல்​வி, மருத்​துவ உதவித்​தொகை, கண் கண்​ணாடி, தையல் இயந்​திரங்​களை வழங்​கி​னார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *