பொத்தேரி: பொத்தேரியில் சுமார் 600 குடியிருப்புகள் கொண்ட தனியார் விடுதியில் போலீஸார் இன்று (சனிக்கிழமை) காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 19 கல்லூரி மாணவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தமிழகம் முழுவதுமே பள்ளி, கல்லூரிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் போதைப் பொருட்கள் விற்பனை சரளமாக நடப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களும், கஞ்சா சாக்லெட் விற்பனையும் தாராளமாக நடப்பதால் சமூக விரோதச் செயல்களும் அதிகரித்து வருகின்றன.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

