சென்னை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க,வாழ்வாதாரத்தை உயர்த்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை திட்டத்துக்கு படிப்படியாகநிதியை குறைத்து பாஜக புறக்கணித்துவருகிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கு 2015-16-ல் மொத்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 2.09 சதவீதமாக இருந்தது,இப்போது 1.78 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அனைத்துக்கும் மேலாக 100 நாள் வேலை திட்டத்தில் வேலைவாய்ப்பு அடிப்படையில் ரூ.1.2 லட்சம் கோடி தேவைப்படுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

