திருச்சி: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அப்போது, விவசாயிகள் பூக்கள், நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்றனர்.
கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டியது. மேலும், அணைக்கு அதிக அளவில்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

