சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்நத்தம் விஸ்வநாதன் சிகிச் ைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைப் பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, நத்தம் விஸ்வநாதனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே வீட்டுக்கு சென்று ஓய்வு எடுத்தார். பின்னர், இரவில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ளஅப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

