மெய்யழகன் திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அர்விந்த் சுவாமி நடிப்பில் உருவான திரைப்படம் மெய்யழகன். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் அர்விந்த் சுவாமிக்கும் உள்ளூரிலிருக்கும் கார்த்திக்கும் இடையேயான உறவைப் பழைய நினைவுகளுடன் பேசும் படமாக இது உருவாகியிருந்தாதால் படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளையும் ரசிகர்கள் ரசித்து குறிப்பிட்டு வருகின்றனர்.
கொட்டுக்காளி தமிழின் பெருமைமிகு படைப்பே… ஏன்?
இருப்பினும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் குறையாகக் கூறிவந்தனர். இந்த நிலையில், 2 மணிநேரம் 57 நிமிடம் ஓடக்கூடிய படத்திலிருந்து 18 நிமிடங்களைப் படக்குழு நீக்கியுள்ளதாகவும் இன்றிருந்தே புதிய வடிவம் திரையிடப்பட்டுள்ளதாத் தகவல்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


