Sorting by

×

ராமநாதபுரம்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

ராமநாதபுரம்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டு, மதுரை அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இளம்பெண்ணின் உடலுக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் கொல்லங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி சந்தியா (27). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மதியம் சந்தியா கமுதிக்கு செல்வதற்காக பேரையூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து அவ்வழியாக சென்ற உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். வாகனத்தில் ஏறிய சில நிமிடங்களில் சந்தியா வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மயங்கியுள்ளார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *