Sorting by

×

ரூ.10 லட்சம் கோடி முதலீடு வந்ததாக பொய் கூறுவதா? – முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழகத்தில் ரூ.10.62 லட்​சம் கோடி முதலீடு வந்​து​விட்​ட​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பொய் சொல்வதாக பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய முதல்​வர், திமுக ஆட்​சிக்கு வந்த பின் ரூ.10 லட்​சத்து 62,752 கோடிக்​கான முதலீடு​களை ஈர்த்​து, 32 லட்​சத்து 81,032 பேருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உறுதி செய்​யப்​பட்​ட​தாக தெரி​வித்​தார். திமுக அரசு கையெழுத்​திட்ட முதலீட்டு ஒப்​பந்​தங்​களில் 10 சதவீதம் கூட நடை​முறைக்கு வராத நிலை​யில் முதல்​வர் கூறு​வது பச்சை பொய். கோயபல்ஸ் கொள்​கையை கடைபிடித்து பொய்யை மீண்​டும், மீண்​டும் கூறி வரு​கின்​றனர். மக்​கள் இதனை நம்ப மாட்​டார்​கள்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *