மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு ‘மஹாரத்னா’ பொதுத்துறை நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா. இந்த நிறுவனம் 278 துணை மின்நிலையங்களுடன் சுமார் 1,77,790 கிமீ டிரான்ஸ்மிஷன் லைன்களை இயக்குகிறது மற்றும் அதன் டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் மூலம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும். மொத்த மின்சாரத்தில் இந்தியாவின் 45 சதவீதம் பரிமாற்றத் திறனிலும், தோராயமாக 1,00,000 கிமீ தொலைத்தொடர்பு வலையமைப்பைச் சொந்தமாகக் கொண்டு இயக்குகிறது.
டிரான்ஸ்மிஷன், சப்-டிரான்ஸ்மிஷன், டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் டெலிகாம் துறைகளின் பல்வேறு அம்சங்களில் அதன் வலுவான உள் நிபுணத்துவத்துடன் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆலோசனை சேவைகளையும் வழங்குகிறது. தொடக்கத்தில் இருந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனமாகும். இது மின்சார சட்டம் 2003 இன் பிரிவு 38 இன் கீழ் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு மூலம் மின்சாரம் பரிமாற்றத்தை மேற்கொள்வதை உள்ளடக்கியது. இந்தியாவில் மின் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
தற்போது, இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer Trainee
பிரிவு: Finance
காலியிடங்கள்: 39
தகுதி: CA,ICWA(CMA) போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அக்னிவீா் ராணுவத்துக்கு
ஆள்சோ்ப்பு முகாம்
பிரிவு: Company Secretary
காலியிடங்கள்: 4
தகுதி: Company Secretary படிப்பை முடித்து ICSI அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 + இதர சலுகைகள்
வயதுவரம்பு: 7.8.2024 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
இந்திய தகவல் தொடர்பு மையத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். வினாத்தாள் கொள்குறி வகை சார்ந்ததாகவும், 150 வினாக்கள் கொண்டதாகவும் இருக்கும். எழுத்துத் தேர்வுக்கு 85 சதவீத மதிப்பெண், குழு விவாதம் 3 சதவீத மதிப்பெண், நேர்முகத்தேர்வுக்கு 12 சதவீத மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முறைகள் இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் தவிர மற்ற பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://powergride.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.8.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

