Sorting by

×

வன குற்றங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

வனவிலங்குகள், அரிய வகை மரங்கள் குறித்த வனக்குற்றங்கள் தொடர்பாக மாவட்டவாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் நிகழும் வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வழக்கறிஞர்கள் அடங்கிய குழுக்களை அமைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வனத்துறை சார்பி்ல் ஆஜரான அரசு சிறப்பு ப்ளீடர் சீனிவாசன், வனக்குற்றங்கள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *