சென்னை: வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிமுக மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண நிதியாக தலா ரூ.1 கோடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்துக்கு தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவும், போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

