குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.
இதற்குக் காரணம் சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதுதான். சமையல் நன்கு தெரிந்த குக்குகள், சமையம் தெரியாத கோமாளிகளுடன் சேர்ந்து சமைக்கும்போது நடக்கும் கலாட்டாக்களை வைத்து இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த சீசனில் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
ரக்ஷன் மற்றும் மணிமேகலை ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்னைக் காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகினார்.
மணிமேகலைக்குப் பதிலாக, சீனியர் கோமாளியாக பங்கேற்று வரும் புகழ் பதிய தொகுப்பாளராக பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் பிரியங்கா முதலிடத்தையும் சுஜிதா இரண்டாவது இடத்தையும் முகம்மது இர்ஃபான் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக குக்குகள், கோமாளிகள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.
அண்மையில் நடந்துமுடிந்த பிக் பாஸ் – 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள், இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்படும் தேதி மற்றும் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மோகன்லாலுக்கே பாதுகாப்பு இல்லை… பாஜகவை விமர்சிக்கும் ரசிகர்கள்!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


