
சென்னை: சேலம் ஜாகிர் அம்மாபாளையம் ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஜவுளி பூங்காவில் நீர், நிலம் மற்றும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வகையிலான சாயப்பட்டறைகள் அமைக்க அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விவசாயத்தையும், குடிநீர் ஆதாரங்களையும் மேம்படுத்துவதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசு, அவற்றை அழிப்பதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


