சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு. வேளாண் துறையில் காலியாக உள்ள வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக கடந்த 2023-ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது.
இதன் மூலம் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

