
சிவகங்கை: திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்த விவகாரத்தில், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட திருப்புவனம் பேரூராட்சி மற்றும் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் மனுக்களை சமர்ப்பித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை திருப்புவனம் வைகை ஆற்றில் இந்த மனுக்கள் மிதந்தன. இதையடுத்து, அவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டுச் சென்றனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


