
சென்னை: “பொறாமை பயத்தின் காரணமாகத்தான் முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து, 'ஆப்ரேஷன் எம்கேஎஸ்' என்ற அடிப்படையில் ஆரம்பித்துவிட்டார்கள்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியது: "மோடியின் பேச்சு, பிஹார் மாநில மக்களிடையே தமிழர்கள் மீது அவநம்பிக்கையையும், விரோத மனப்பான்மையையும் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிசா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொய் பிரச்சாரத்தின் மூலமாக வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் பிரதமர் செயல்படுகிறார். ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டிய இடத்திலும், பிளவுகளைச் சரி செய்ய வேண்டிய இடத்திலும்தான் பிரதமர்கள் இருக்க வேண்டும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


