மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஷுப்மல் கில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் முன்னாள் சாம்பியன்களான மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி தொடரில் இருந்து வெளியேறியது. மும்பை அணி குவாலிஃபையர் 2-க்கு தகுதி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் சுண்டுதலில்போது டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்பின்னர், குஜராத் அணியின் கேப்டனான கில்லிடம் கை கொடுக்கச் சென்றார்.

ஆனால், அவர் மறுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அதேபோல, ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்ததும், அவரை நோக்கி சப்தமாக கத்திக்கொண்டு ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் ஹார்திக் பாண்டியா.
இரு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் அணியின் கேப்டனான ஹார்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடிக் கொண்டிருந்த ஷுப்மன் கில் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
டாஸின் போது கைக் கொடுக்காமல் சென்ற நிலையில், அவருக்கு தலைக்கணம் கூடிவிட்டதாக ரசிகர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. இது விவாதப் பொருளான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷுப்மன் கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “அன்பைத் தவிர வேறொன்றுமில்லை. இணையத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் ஷுப்மன் கில்லின் பொறுப்பான பதில் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதையும் படிக்க: சக்கர நாற்காலியில் அமர்ந்து கிரிக்கெட் விளையாடிய ஏபிடி! வைரல் விடியோ!
Gill and Hardik didn’t shake hands during toss time. It seemed like Hardik wanted to shake hands with Gill, but the latter was not at all interested. What’s brewing up btwn them?? Your thoughts on this… #GTvMI #TATAIPL #Eliminator #TheLastMile pic.twitter.com/CtfZP1fJ3z
— (@imAditya168_) May 31, 2025
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


