Sorting by

×

Seeman: “அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு” – ரகசியம் சொல்லும் சீமான்!

‘சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு!’ அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தால் துணை முதல்வர் ஆக்குகிறோம் என்று ஆதவ் அர்ஜுனா, தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். ஆதவ் அர்ஜூனா – புஸ்ஸி ஆனந்த் த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் நடந்த கல்வி விருது வழங்கும் விழா நேற்று பூஞ்சேரியில் நடந்திருந்தது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் போது அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த்தும், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று […]

இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக படுதோல்வி: அன்புமணி விமர்சனம்

சென்னை: ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் பேர் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். ஆனால், அந்த இடங்களை நிரப்பத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா? இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக படுதோல்வி அடைந்துவிட்டது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 8144 பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். மே மாத இறுதியில் அரசு ஊழியர்கள் […]

தேசவிரோத குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் ஆன மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவரை தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் படித்து வரும் அஸ்லம், சயீத், நஹல் இப்னு ஆகிய மூன்று மாணவர்கள் தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி தேர்வுக்கு முந்தைய நாள் கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அஸ்லாம் என்ற […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை (மே 31) முதல் ஜூன் 6-ம் தேதி வரை, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தீவிரமாக உள்ளது. […]

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திண்டுக்கல்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் அடுத்த கோபால்பட்டி வாரச்சந்தையில் இன்று (மே 31) ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோபால்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தற்போது மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருமணம், காதணி விழா உள்ளிட்ட விசேஷங்களில் அசைவ விருந்து அளிப்பதற்காகவும், ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று (மே 31) […]

பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி

சென்னை: பாமக அலுவலக முகவரியை கட்சித் தலைவர் அன்புமணி மாற்றியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, பாமகவில், கட்சி நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு வெடித்து விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அன்புமணி வெளியிட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பாமக அலுவலகத்தின் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, சென்னை, தி.நகரில் உள்ள தனது வீட்டின் முகவரியை கட்சி அலுவலக முகவரியாக அன்புமணி மாற்றியுள்ளார் என்று தெரிகிறது. சோழிங்கநல்லூரில் இன்று இரண்டாவது நாளாக […]

மூட்டை முடிச்சுகளுடன்.. தில்லி மதராசி முகாம் மக்கள் கண்ணீர்!

கடந்த 60 ஆண்டுகாலமாக இதுதான் எங்கள் வீடு, ஆனால், திடீரென எப்படி மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறுவது என்று 67 வயது பெண் ஒருவர் கூறி கண்ணீர் விடுகிறார். தனது சிறு வயதில், குடும்பத்துடன் இந்த மதராஸி முகாமுக்கு வந்த இவர், தனது முதுமைக் காலத்தை வேறு எங்கோ சென்று கழிக்க வேண்டியதை நினைத்து பெரும் துயருற்றுள்ளார். தில்லியின் பழமையான அங்கீகரிக்கப்பட்ட பஸ்திகளில் ஒன்றான ஜங்புராவில் உள்ள மதராஸி கேம்ப், தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் […]

PMK : ‘ராமதாஸ் அய்யா குலசாமி; நான் கட்சித் தலைவர்!’ – அன்புமணி திட்டவட்டம்

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி இரண்டாவது நாளாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் பேசிய அவர், ” கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஐயா நம்முடைய குலசாமி, குலத்தெய்வம். ஐயா கட்சியின் கொள்கை வழிகாட்டி. 45 ஆண்டுகால ஐயாவின் உழைப்பு இந்தக் கட்சியில் இருக்கிறது. அன்புமணி – ராமதாஸ் நான் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன். கட்சியினர் நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் சுற்றுப்பயணம் […]

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஜூன் 2இல் தொடக்கம்

”ஆன்லைன் விண்ணப்பம் 02.06.2025 காலை 10:00 மணி முதல் தொடங்கும் எனவும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 27.06.2025 மாலை 5:00 மணி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது” ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL