சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பால் தமிழகத்தின் பொருளாதாரம் சரியும். பிரதமர் மோடி ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளார். ரஷ்யா கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் அம்பானிக்கும், அதானிக்கும்தான் கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு ரஷ்யா கொடுக்கிறது. அதன் பயன் […]
Month: August 2025

பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் இன்று பதவியேற்பு
சென்னை: தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் இன்று பதவியேற்கிறார். தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து பணி மூப்பு அடிப்படையில் தற்போது டிஜிபிக்களாக உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர் டிஜிபியாக வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created […]

ரூ.10 லட்சம் கோடி முதலீடு வந்ததாக பொய் கூறுவதா? – முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டனம்
சென்னை: தமிழகத்தில் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு வந்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்வதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், திமுக ஆட்சிக்கு வந்த பின் ரூ.10 லட்சத்து 62,752 கோடிக்கான முதலீடுகளை ஈர்த்து, 32 லட்சத்து 81,032 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். திமுக அரசு கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 10 சதவீதம் கூட நடைமுறைக்கு வராத நிலையில் […]

சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலினுக்கு இடமில்லை: அன்புமணி விமர்சனம்
சென்னை: மொத்தம் 10 முதலமைச்சர்களைக் கொண்ட பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது; அனைத்துத் தரப்பினரின் வெறுப்பையும் பெற்றுள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா டுடே வார இதழ் சார்பில் இந்தியாவில் 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் கூடுதலாக உள்ள மாநிலங்களை ஆளும் முதலமைச்சர்களில் சிறப்பாக செயல்படுபவர் யார்? என்பதை அறிவதற்காக நடத்தப்பட்ட கருத்துக் […]

“மக்கள் நலன் காக்க ஒரே தீர்வு… அதிமுக ஒன்றுபட வேண்டும்!” – சசிகலா
தமிழக மக்களின் நலன் காக்க ஒன்றுப்ட அதிமுக தான் ஒரே தீர்வு என்று சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கம், இன்றைக்கு ஏளனமாக பேசும் அளவுக்கு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் இன்று கட்சி பெரும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என […]

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,828 கன அடியிலிருந்து வினாடிக்கு 16,493 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 850 கன […]

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?
மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் மோதலுக்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூருக்கு பிரதமர் மோடி செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் செல்ல வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மிசோரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில், செப்டம்பர் 12 முதல் 14 ஆம் தேதிகளில் ரயில்வே மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி செல்லவுள்ளார். இதனைத் தொடர்ந்து, மணிப்பூருக்கும் பிரதமர் மோடி செல்லலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரதமரின் […]

புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்
புதுச்சேரியில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும் தற்போதைய நெடுங்காடு எம்எல்ஏ-வுமான சந்திரபிரியங்கா (35), தனக்கு அமைச்சர் ஒருவர் தொடர்ந்து தொல்லை அளித்து வருவதாக விடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்த விடியோவில் அவர் பேசுகையில், காரைக்காலில் ஒரு பதாகை பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வந்தது. அந்தப் பதாகையில் எனது படமும் இருந்ததால், நான் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. pic.twitter.com/RERn4XPi3T — Chandirapriyanga (@CPriyanga_offl) August 30, 2025 நீதிமன்றத்துக்கு செலவுகூட செய்யமுடியாத ஒருவர்தான் […]

திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் 2-வது நாளாக உண்ணாவிரதம்
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து திருவள்ளூர் எம்.பி. சசி காந்த் செந்தில் 2-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு பார்வையாளர் கூட்ட அரங்கில் திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் நேற்று முன்தினம் காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரத […]

“நம்பகத்தன்மையற்ற பழனிசாமியை நம்பி எப்படி கூட்டணிக்குச் செல்ல முடியும்?” – இரா.முத்தரசன் நேர்காணல்
கம்யூனிஸ்ட் கட்சிகளை முதலில் தங்கள் கூட்டணிக்கு இழுத்துப் பார்த்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இப்போது, “கம்யூனிஸ்ட்கள் திமுக-வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டன. தேர்தலுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போய்விடும்” என கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். பதிலுக்கு தோழர்களும், “காணாமல் போகப் போவது கம்யூனிஸ்ட்களா அதிமுக-வா என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியும்” என்று பழனிசாமியை காய்ச்சி எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநில செயலாளர் இரா.முத்தரசனிடம் அதிமுக விமர்சனம், திமுக […]
