சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான நடவடிக்கையை ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், நிர்வாக ரீதியிலான தாமதத்தை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும். Disclaimer :- This story is generated by […]
Month: August 2025

பிரிவு உபசார விழாவில் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தலைமைச் செயலர் புகழாரம்
டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் காவல் துறை சிறப்பாக பணியாற்றியதால் தமிழகத்தில் பெரிய அளவில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை என்று தலைமைச் செயலர் முருகானந்தம் தெரிவித்தார். தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. Disclaimer :- This story is generated […]

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விளக்கம்
திருச்சி: திருச்சியில் ஏற்கெனவே 2 இடங்களில் டி-மார்ட் கார்ப்பரேட் நிறுவனக் கிளைகள் இயங்கி வரும் நிலையில், வயலூர் சாலையில் 3-வது கிளை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து, டி-மார்ட் கிளை அமைய உள்ள வயலூர் சாலை வாசன் வேலி பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு மற்றும் நிர்வாகிகள், வணிகர்கள் […]

தமிழகத்தில் நாளை முதல் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற உத்தரவு: டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை: தமிழகத்தில் நாளை (செப். 1) முதல் காலி மது பாட்டில்களை வாங்க உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, டாஸ்மாக் ஊழியர் சங்க (சிஐடியு) மாவட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by […]

அமெரிக்க வரிவிதிப்பு நெருக்கடி: தொழில்களை பாதுகாக்க நிவாரணம் வழங்கும் கொள்கைகளை உருவாக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாப்பதுடன் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன. கடந்த நிதியாண்டில், தமிழக பொருட்கள் 31 சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த […]

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்: இபிஎஸ், நயினார் நாகேந்திரன் விமர்சனம்
சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். பழனிசாமி: உண்மையிலேயே ஸ்டாலின் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கச் செல்கிறாரா அல்லது முதலீடு செய்வதற்கு செல்கிறாரா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 2021 முதல் 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாக கூறுகின்றனர். இவற்றில் பெரும்பாலானவை அதிமுக ஆட்சியில் போடப்பட்டதன் தொடர்ச்சியே. Disclaimer :- This story is generated by computerised […]

ஒரே எதிரி திமுக என்பதை மனதில் கொண்டு தேர்தல் பணியாற்றுங்கள்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல்
சென்னை: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை யாரும் விமர்சிக்க வேண்டாம். நமது ஒரே எதிரி திமுக என மனதில் கொண்டு தேர்தல் பணியாற்றுங்கள் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அளவில் பாக கிளை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதுவரை எந்த பணிகளையும் கட்சி சார்பில் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த பாக கிளைகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் […]

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நாளுக்குநாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அந்நாட்டு அரசும் காவல்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், கொலை சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிகழ்த்தப்படும் கொலை சம்பவங்களை மற்றைய நாடுகளுடன் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இதுகுறித்து, அவர் பேசுகையில், 2024 ஆம் ஆண்டில் சிகாகோவின் கொலை விகிதம், இந்திய […]

ஒரே மேடையில் இபிஎஸ் – அண்ணாமலை பரஸ்பரம் நெகிழ்ச்சி!
சென்னை: தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று மலர்வளையம் வைத்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் மூப்பனார் நினைவிடத்தில் மலர் […]

செப். 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவைத் தொடர்ந்து, வரும் செப். 1-ம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு 2025-26-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545-ஆகவும், பொதுரக நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500-ஆகவும் உயர்த்தி […]
