Sorting by

×

விஜய்யின் வீடியோ உரை ‘அரசியல் உள்நோக்கம்’ கொண்டது: பெ.சண்முகம்

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ உரை என்பது முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் 27-ம் தேதி கரூரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 41 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோயுள்ளன. பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்ற நொடியில் […]

கரூர் துயரம்: பாஜக சதியை முறியடிக்க காங்கிரஸுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: ‘கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவத்தில் பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் தலையீடு அவசியம்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கரூர் துயரச் சம்பவத்தை திசை திருப்ப முயற்சிக்கும் வகையில் பாஜக எம்.பி.-க்கள் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. எனவே, பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.-க்கள் கொண்ட குழுவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நியமனம் செய்ய வேண்டும். அவர்களை […]

கரூர் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் விளக்கம்: பழனிசாமி சாடலும், தங்கம் தென்னரசு பதிலும்

சென்னை: “கரூர் விவகாரம் குறித்து பேசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும் போது வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? உண்மைச் சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை அரசு அரங்கேற்றி வருகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார். இதற்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து சாடியுள்ளார். எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கரூர் துயரச் சம்பவத்துக்கு பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் […]

விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: “உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!”

கரூர் பெருந்துயர் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவரைக் காண வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார். அதில், ‘இரண்டு வாரங்களாகப் பல ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். விஜய் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? உண்மைகள் விரைவில் வெளியே தெரிய வரும்’ என அரசின் மீதும் காவல்துறையின் மீதும் விஷயத்தைத் திருப்பிவிடுகிறார். ‘தைரியத்தோடு மீண்டும் வருவோம்’ என்கிறார். எல்லாம் சரிதான். ஆனால், அத்தனை உயிர்கள் […]

போர் நிறுத்தம்: ஹமாஸுக்கு 3 – 4 நாள்கள் அவகாசம் அளித்த டிரம்ப்!

இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்ச பரிந்துரைகளுக்கு பதிலளிக்க காஸாவுக்கு 3 – 4 நாள்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவகாசமாக அளித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸின் ஆயுதக் குறைப்பு, ஹமாஸ் தரப்பிலுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது போன்றவற்றிற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டால் காஸாவிலுள்ள இஸ்ரேல் வீரர்கள் படிப்படியாக திரும்பப் பெறப்படுவார்கள் என பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் – காஸா இடையே இரு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான […]

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (செப்டம்பர் 30) தொடங்கியது. குவாஹாட்டியில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது. மழை காரணமாக […]

கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் கூட நெரிசலில் சிக்கு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஏ.டி.ஜி.பி டேவிட்சன், மருத்துவத்துறை செயலாளர் ஆகியோர் சென்னையில் விளக்களித்தனர். செய்தியார்களிடம் பேசிய தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ், “அவர்கள் (த.வெ.க) முதலில் தங்களின் கடிதத்தில் 7 இடங்களைக் குறிப்பிட்டிருந்தார்கள். 25-ம் தேதி வேலுச்சாமிபுரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் நடத்திய கூட்டத்தில் 10 முதல் 15 ஆயிரம் […]

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்பிப்பு!

பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக, குழுவின் இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையினை ஒன்பது மாதங்களில் அரசிற்கு அளித்திட ககன்தீப் சிங் பேடி, […]

கல்லூரி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி! மாணவர்கள் போராட்டம்!

ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். கடந்த 1925 ஆம் ஆண்டு, மறைந்த கே.பி. ஹெட்கேவரினால் நாக்ப்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு செய்வதைக் கொண்டாடும் வகையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரிலுள்ள ராஜஸ்தான் பல்கலைக் கழக […]