Sorting by

×

மதுரை: “நான் எப்படி டீல் செய்வேன் என்பது சீனியர் லீடர்களுக்கு தெரியும்” – சசிகலா சூசகம்!

“அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும்” என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா தேவர் ஜயந்தி விழாவில் கலந்ததுகொள்ள பசும்பொன் வந்த வி.கே.சசிகலா, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாவட்டம் தோறும் சரியான அதிகாரிகளை நியமிக்காமல் உள்ளனர். கடந்த 10 மாதங்களில் தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, திமுக அரசை அகற்றினால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும். […]

பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறியது உண்மை – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

சென்னை: "உழைக்கும் பிஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. பிஹார் மக்களை துன்புறுத்தியதாக பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக முதல்வர் ஸ்டாலின் மடைமாற்ற முயற்சிக்கிறார்" என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். […]

SIR Row : `குதிரைக்கு கொம்பு முளைக்குமா? – சிபிஐ(எம்) க.கனகராஜ் | களம் 02

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) மாநில செயற்குழு உறுப்பினர் – சிபிஐ (எம்)கட்டுரையாளர்: க. கனகராஜ் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரண்டாவது கட்டமாக நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகாரில் நடைபெற்றது முதல் கட்டம் என்கிறது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட […]

“தாத்தா காலத்து அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, ஸ்டாலின் நிறுத்தணும்” – அண்ணாமலை

பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில், பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கண்டனம் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடி ஸ்டாலினின் இந்த கண்டனத்திற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை […]

“தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்”- பரப்புரையில் மோடி; ஸ்டாலின் கண்டனம்

பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், ” இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி ஒடிசா – பீகார் என்று எங்கு […]

தமிழகத்தில் 5 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து

சென்னை: தமிழகத்தை சேர்ந்த 5 உயர் அதி​காரி​களுக்கு ஐஏஎஸ் அந்​தஸ்து வழங்கி மத்​திய அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இதுதொடர்​பாக மத்​திய அரசின் பணி​யாளர் மற்​றும் பயிற்​சித் துறை சார்பு செயலர் பூபீந்​தர் பாய் சிங் வெளி​யிட்​டுள்ள உத்​தர​வில் கூறி​யுள்​ள​தாவது: தமிழ்​நாடு குடிமை​யியல் பணி அதி​காரி​களான எஸ்​.க​வி​தா, சி.​முத்​துக்குமரன், பி.எஸ்​.லீலா அலெக்​ஸ், எம்​.வீரப்​பன், ஆர்​. ரேவதி ஆகியோரை இந்​திய ஆட்​சிப் பணி (ஐஏஎஸ்) அதி​காரி​களாக குடியரசுத் தலை​வர் நியமித்​துள்​ளார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. Disclaimer :- This story […]

நில அளவையர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசுக்கு கோரிக்கை

சென்னை: நில அளவையர் காலிப் பணி​யிடங்​களை நிரப்​புவது உள்​ளிட்ட 14 அம்ச கோரிக்​கைகளை விரை​வில் நிறைவேற்ற வேண்​டும் என்று தமிழ்​நாடு நில அளவை அலு​வலர் ஒன்​றி​யம் அரசுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்​து, தமிழ்​நாடு நில அளவை அலு​வலர் ஒன்​றி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 6 கோடிக்கு மேல் உள்ள பட்​டா​தா​ரர்​களின் நிலங்​கள் மனை​களை அளக்க வேண்​டிய பொறுப்பு 3999 சர்வே அலு​வலர்​களைச் சாரும். Disclaimer :- This story is generated by computerised program […]

‘தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும் அற்ப அரசியல்’ – மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்ளும் அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். Disclaimer […]

சேலத்தை பலம் சோதிக்கும் களமாக மாற்றிய ராமதாஸ் – அன்புமணி!

பாமகவுக்கு செல்வாக்கு மிக்க மாவட்டங்களில் சேலம் பிரதானமாக உள்ளது. இங்கு, மேட்டூர் பாமக எம்எல்ஏ-வாக சதாசிவமும், சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ-வாக அருளும் இருந்து வருகின்றனர். இதில், ராமதாஸுக்கு ஆதரவாக அருளும், அன்புமணிக்கு ஆதரவாக சதாசிவமும் கொடிதூக்கி நிற்கிறார்கள். இந்த நிலையில், சேலத்தில் தங்களது இருப்பைத் தக்கவைக்க அண்மையில் அங்கே, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார் ராமதாஸ். அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “பாமக இளைஞரணிக்கு தளபதியாக தமிழ்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து இளைஞர்களும் […]