கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் அடங்கிய அந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண் ராஜை சந்தித்து பேசினோம். அருண் ராஜ் திடீரென இப்படியொரு நிர்வாகக்குழு எதற்காக? கட்சிக்குள் இந்தக் குழுவின் செயல்பாடுகள் என்னவாக இருக்கும்? எல்லா தரப்பின் கருத்துகளையும் கேட்டு […]
Month: October 2025

என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ முடியும்: சசிகலா
மதுரை: என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ தான் முடியும் என அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மதுரையில் இன்று தெரிவித்தார். மதுரையில் இன்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 10 மாதங்களில் மாவட்டந்தோறும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. பள்ளி அளவில் போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திமுக அரசின் கண் அசைவு இல்லாமல் போதைப்பொருள் இந்தளவுக்கு புழக்கம் வருவதற்கு வேலை இல்லை. […]

சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என பசும்பொன் சந்திப்பில் முழக்கமிட்ட வைகோ!
மதுரை: அரசியலில் எதிரும், புதிருமாக இருந்து வந்த வைகோ, சீமான் பசும்பொன்னில் ஒன்றாக சந்தித்துக் கொண்டதோடு, சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என முழக்கமிட்டதோடு அவரை ஆரத்தழுவி கட்டி அனைத்துக் கொண்டது, நாதகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளில் எதிரெதிர் துருவமாக செயல்பட்டு வந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமான விவகாரத்தில் ஒருவர் மீது ஒருவர் மிகக் கடும் விமர்சனங்களை […]

சுசீந்திரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, சிவனாகிய பரமேஸ்வரன் அருளால் அனைவருக்கும் எல்லாம் கிடைக்கட்டும் என பதிவேட்டில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரு நாள் பயணமாக குடும்பத்தினருடன் நேற்று மதியம் கன்னியாகுமரி வந்தார். நேற்று மாலை கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று தியானம் செய்த ஆளுநர், கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் […]

செங்கோட்டையனை நீக்குவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை: இபிஎஸ் திட்டவட்டம்
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு இன்று சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited […]

ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒரே காரில் வருவது குறித்து எனக்கு தெரியாது: இபிஎஸ்
ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் வருவது குறித்து எனக்கு தெரியாது. வந்தால் அதுகுறித்து பதில் சொல்கிறேன் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி, 63-வது குருபூஜையையொட்டி தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார், எம்.மணிகண்டன், காமராஜ், விஜயபாஸ்கர், செல்லூர் […]

70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழைநீர் வடிந்தது: 5 மணி நேரம் கண்காணித்து பணிகளை முடித்த கும்பகோணம் எம்எல்ஏ
கும்பகோணம்: கும்பகோணத்தில் 70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழை நீர் பல்வேறு காரணங்களால் வடியாததால் 5 மணி நேரம் பணிகள் மேற்கொள்ளும் இடத்தில் அமர்ந்து கும்பகோணம் எம்எல்ஏ மழைநீரை வடிய செய்துள்ளார். கும்பகோணத்தில் கடந்த ஆக.19-ம் தேதி பெய்த மழையின் போது சோலையப்பன் தெரு, ஆலையடி சாலை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதேபோல் வாழை, கரும்பு, தீவனப் புல் மற்றும் நெற்பயிர் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கியது. Disclaimer :- This story […]

தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேர்வு!
சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 பேராசிரியர்கள் ‘தேசிய அறிவியல் விருது’க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய அறிவியல் விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருது விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்நாகர், விஞ்ஞான் டீம் என 4 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. சென்னை ஐஐடி அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலப்பில் பிரதீப், மோகனசங்கர் சிவப்பிரகாசம், ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகிய 3 பேர் […]

வானிலை முன்னறிவிப்பு: நவ.5 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.5-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (அக்.31) முதல் நவ.4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 5-ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]

இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்படும் அவலம்!
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை கடற்படையினரால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினாலும் , சிறை தண்டனை மற்றும் அபராதம் கட்டியப் பிறகும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படவில்லை. Disclaimer :- This story is generated by computerised program and […]

