Sorting by

×

டிட்வா: “அவர்கள் மீண்டெழுந்திட துணை நிற்போம்” – இலங்கை பாதிப்பு குறித்து ஸ்டாலின்

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் இலங்கையைப் புரட்டி போட்டிருக்கிறது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் ‘டிட்வா’ புயல் பாதிப்பு; நிலைமையை சமாளிக்க ‘ஆபரேஷன் சாகர் பந்து’ மூலம் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிட தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” […]

உதயநிதி பிறந்தநாள் விழா: தனது சமுதாயத்தினரை மட்டும் அழைத்துச் சென்றாரா ஊட்டி இளைஞர் அணி அமைப்பாளர்?

தமிழ்நாட்டின் துணை முதல்வரும் தி.மு.க-வின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். படுகர் சமுதாய இளைஞர்கள் இந்த நிலையில், நீலகிரி மாவட்ட இளைஞரணி சார்பில் அதன் மாவட்ட அமைப்பாளர் இமயம் சசி என்பவர் தனது சமுதாயத்தைச் சேர்ந்த படுகர் இளைஞர்களை மட்டும் அழைத்துச் சென்று உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்றும், இளைஞரணி அமைப்பாளர் […]

டிட்வா புயல்: “3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்; உழவர்களுக்கு திமுக செய்யும் துரோகம்” – அன்புமணி

‘டிட்வா’ புயல் காரணமாக, தமிழகத்தின் தென் மற்றும் வட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், மற்றும் சில உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் எச்சரிக்கையாக நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. மழை பாதிப்பு இந்த நிலையில், தொடர்ந்து பெய்துவரும் மழையால் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. […]

’’அவங்களுக்கு ஓட்டே இருக்காதே’ ; அன்று விஜய் ரசிகர்களை அலற விட்ட செங்கோட்டையன்!’ – நாஞ்சில் அன்பழகன்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததுதான் தமிழக அரசியல் களத்தில் கடந்த வார பேசு பொருளாக இருந்தது. செங்கோட்டையனின் முடிவுக்கு ஆதரவும் விமர்சனமும் சமமாகக் கிடைத்து வந்தபடி இருக்கின்றன. இந்த நிலையில் ’விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுக கூட்டணியில் சேர்ந்து தேர்தலையே சந்தித்திருக்க வேண்டிய ஒரு சூழல் இதே செங்கேட்டையனால்தான் முன்பு தடைபட்டது’ என்கிறார் அதிமுகவின் கலைப் பிரிவு இணைச் செயலாளரும் நட்சத்திரப் பேச்சாளருமான நாஞ்சில் பி சி அன்பழகன். இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் […]

National Herald Case: ரூ.2000 கோடி சொத்து அபகரிப்பு? சோனியா, ராகுல் மீது புதிய வழக்கு; பின்னணி என்ன?

காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸார் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மற்றும் அதன் சொத்துக்களைச் சட்டவிரோதமாக வாங்கியதாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி கடந்த 2012ம் ஆண்டு டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அம்மனுவை விாசரித்த நீதிமன்றம் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டு இருந்தது. எனவே அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் முக்கிய […]

டிட்வா புயல் பாதிப்பு: “இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

‘டிட்வா’ புயல் பாதிப்பு மற்றும் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இன்று (நவ.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “இந்தப் புயலின் உண்மையான தாக்கம் என்ன என்பதை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். டிட்வா புயல் – கடல் சீற்றம் புயலை எதிர்கொள்வதற்கான சரியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்கிறது. இலங்கையில் சிக்கி தவித்து வருபவர்களை அழைத்து வருவதற்கான […]

‘பதவி போச்சு தலைவரே… மனசு கஷ்டமா இருக்கு’ – ஸ்டாலினிடம் குமுறிய கோவை திமுக நிர்வாகி

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மாநிலம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளிடம் செல்போனில் பேசி வருகிறார். கோவை மாவட்டம், காரமடை நகர செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட வெங்கடேஷிடம் ஸ்டாலின் செல்போனில் பேசினார். அப்போது வெங்கடேஷ் தன் புலம்பல்களை குமுறி கொட்டிவிட்டார். வெங்கடேஷ், “வணக்கம் தலைவரே. எனக்கு அழுகை வருது தலைவரே. எஸ்ஐஆர் வேலை எல்லாம் […]

“15 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளோம்”- செளராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்புக்குழு

வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் ஆதரவு யாருக்கு என்று அறிவிப்பதற்காக செளராஷ்ட்ர அரசியல் ஒருங்கிணைப்புக் குழு (SPAC) மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வருகின்ற டிசம்பர் 28 அன்று அரசியல் எழுச்சி மாநாடு நடத்துகிறது. மாநாட்டுப் பணிகள் தொடக்கம் அதை முன்னிட்டு மாநாட்டுக்கான வலைதளம், மாநாட்டுக்கான செளராஷ்டிர மொழி பாடல் வெளியீடு மற்றும் ஆட்டோ விளம்பரங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செளராஷ்ட்ர அரசியல் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி […]