Sorting by

×

7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு விவசாயி மகள் சுவேதா தேர்வு!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவிக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

திருச்சுழி அருகே உள்ள மைலி இலுப்பைக்குளத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (40). இவர்களது இளைய மகள் சுவேதா (18). இலுப்பைகுளம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர், திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து 9 முதல் பிளஸ்-2 வரை படித்து தேர்ச்சி பெற்றார். இலுப்பைகுளம் கிராமத்திலிருந்து தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து மெயின் ரோட்டுக்கு வந்து, பின்னர் அங்கிருந்து பேருந்தில் பள்ளி வந்து செல்வார். பிளஸ்-2 வில் 600 க்கு 555 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *