சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் ஃபென்ஜால் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் அம்மையம் தெரிவித்திருப்பதாவது, புதுச்சேரியில் இருந்து 80 கி.மீ., மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. ஃபென்ஜால் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தாம்பரத்தில் மின்சார ரயில்கள் சேவை நிறுத்தம்
காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கிறது.
கரைக்கு அருகே வரும்போது புயலின் நகர்வு வேகம் குறையும். புயல் காரணமாக சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் நிலையில் பலத்த சூறைக்காற்றினால் கடல் கொந்தளிப்புடன் உள்ளது.
சென்னை அருகே கோவளத்தில் 65 கி.மீ.க்கு மேல் பலத்த காற்று வீசி வருகிறது. கோவளம் சுற்றுப்பகுதியில் வீசி வந்த பலத்த காற்றின் வேகம் 65 கி.மீ.க்கு மேல் அதிகரித்தது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


