பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி இரண்டாவது நாளாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் பேசிய அவர், ” கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஐயா நம்முடைய குலசாமி, குலத்தெய்வம். ஐயா கட்சியின் கொள்கை வழிகாட்டி. 45 ஆண்டுகால ஐயாவின் உழைப்பு இந்தக் கட்சியில் இருக்கிறது.

நான் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன். கட்சியினர் நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு குழப்பங்களுக்கு முடிவு கட்டுவேன். ராமதாஸ் அய்யா கொள்கைத் தலைவர். அவரின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்போம்.
அவர் நமக்கான வழிகாட்டி. நான் தான் கட்சியின் தலைவர். விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வேலையை பார்க்க வேண்டும். தூசியை தட்டுவதைப் போல விமர்சனங்களை தட்டிவிடுங்கள்.

நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது. களத்தில் நான் இருக்கிறேன். யாரும் உங்கள் மீது கை வைக்க முடியாது. பொறுப்பை பகிர்ந்துகொள்ளுங்கள் எல்லாவற்றையும் நீங்களே பார்க்க வேண்டும் என்றில்லை. கட்சி யாருடைய சொத்தும் கிடையாது.” என்றார்
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


