சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அனுமதியளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் பேசும்போது, மீனாட்சி அம்மன் கோயிலில் 1956-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அறிஞர் அண்ணா குறித்து பேசியதை குறிப்பிட்டார். ஆனால், அப்போது முத்துராமலிங்கத் தேவர் அவ்வாறு பேசவில்லை என்று பத்திரிகைகள் தகவல் வெளியிட்டன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
