காரைக்குடி: ''அதிமுக அணையப் போகும் விளக்கு. அதனால் பிரகாசமாக எரிகிறது'' என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி காரைக்குடி செட்டிநாட்டுக்கு வந்திருந்த பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழக தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித் ஷா திருமயம் பைரவர் கோயிலுக்கு வருவதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக செல்ல முடியவில்லை. எனினும், தேர்தல் முடிவதற்குள் அந்தக் கோயிலுக்கு வருவதாக உத்தரவாதம் கொடுத்திருந்தார். அதன்படி தேர்தல் பிரச்சாரம் முடியும் கடைசி நாளில் கோயிலுக்கு வந்துள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
