Sorting by

×

தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு திமுகவும், அதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தேமுதிக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பாமக ராமதாஸ் அணி உள்ளிட்ட சிலர் மட்டுமே கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கிறார்கள்.

தேர்தல்
தேர்தல்

இன்னும் சில நாள்களில் கூட்டணிகள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வேலுமணி பிரேமலதா சந்திப்பு

மேலும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோரும் ஈஷா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர். முக்கியமாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் கலந்து கொண்டார்.

எஸ்.பி. வேலுமணி தான், பிரேமலதாவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் அறிமுகம் செய்து வைத்தார். கடந்தாண்டு நடைபெற்ற ஈஷா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, வேலுமணி கலந்து கொண்டனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி

அதன் பிறகு அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. அதே நிகழ்வில் இந்த முறை வேலுமணியுடன் பிரேமலதா கலந்திருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *