Sorting by

×

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கிய போர், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை எட்டும் என்று உலகமே நினைத்திருந்தது.

ஆனால், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிந்துள்ளது.

21 மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தும், ஏன் நல்ல முடிவு எட்டப்படவில்லை?

காலிபாஃப் - ஷெபாஸ் ஷெரீப்
காலிபாஃப் – ஷெபாஸ் ஷெரீப்

> ஆரம்பத்தில் இருந்தே ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை.

2025-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்கா ஈரானைத் தாக்கிய போது கூட, ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு பகுதிகளைத்தான் குறி வைத்தது.

இப்போதும் போர் தொடங்கியதற்கு இதுவே காரணம்.

நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ஜே.டி.வான்ஸ் இதை முன்னெடுத்தபோது, இதற்கு ஈரான் தயாராக இல்லை.

> ஹார்முஸ் ஜலசந்தி தங்களிடம் இருக்க வேண்டும் என்றும், அந்தப் பாதையைக் கடக்க ஈரானுக்கு கப்பல்கள் சுங்க வரி கட்ட வேண்டும் என்றும் ஈரான் கூறியிருக்கிறது. ஆனால், அமெரிக்கா இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

> அமெரிக்கா முடக்கி வைத்திருக்கும்‌ ஈரான் சொத்துகளை உடனடியாக விடுவிக்கப்படும் என்று பேசப்பட்டிருக்கிறது. இதற்கு அமெரிக்கா ஒத்துக்கொள்ளவில்லை.

> லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கும் அமெரிக்கா ஒத்துக்கொள்ளவில்லை.

ஆக, பரஸ்பர எந்தக் கோரிக்கைக்கும் இரு நாடுகளும் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான், பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *