தஞ்சாவூர்: தமிழக அமைச்சரவையில் ஐந்தாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திமுகவின் மூத்த நிர்வாகிகள் தங்களுக்கு இடம் கிடைக்கும் என பெரிதும் நம்பி இருந்த நிலையில் அவர்களுக்கு இடம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது டெல்டா மாவட்டங்களில் உள்ள எந்த ஒரு எம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை .அப்போது எல்லோரும் டெல்டாவில் உள்ள எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு `நானே டெல்டாக்காரன் தான்', `முதல்வரே டெல்டாவை சேர்ந்தவர்' என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
