மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் வெடித்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அங்கு இன்னும் அமைதி திரும்பிய பாடில்லை. இந்த ஓராண்டில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் எண்ணிக்கை திடீரென குறைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.