Sorting by

×

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள வடரங்கத்திலிருந்து சீர்காழிக்கு நேற்று அரசுநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த எஸ்.அன்பழகன்(44) பேருந்தை ஓட்டினார்.

பனங்காட்டாங்குடி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் இடதுபுறம் முன்பக்க சக்கரம் கழன்று, பேருந்துக்கு முன்னே தனியாக சாலையில் ஓடியது. இதைக்கண்ட ஓட்டுநர்சாதுர்யமாக செயல்பட்டு, உடனடியாக சாலையோரம் பேருந்தைநிறுத்தினார். பின்னர், பயணிகள்இறக்கிவிடப்பட்டனர்.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *