Sorting by

×

திருப்பூர்: அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழைக்கு காசிகவுண்டன்புதூர், வேலாயுதம்பாளையம், பழங்கரை, செம்பியநல்லூர், நம்பியாம்பாளையம், பாப்பான்குளம், புலிப்பார், புஞ்சைத் தாமரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் பயிரிட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த பல லட்சம் மதிப்பிலான 9 ஆயிரம் வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

இது குறித்து தோட்டக்கலை, வருவாய் துறையினர் கூட்டாக கணக்கெடுக்கும் பணியை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், திடீரென வீசிய சூறாவளி காற்றில் வாழைகள் முற்றிலும் சேதமடைந்தது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கிவிட்டது. இந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் பலர் காப்பீடு செய்வதில்லை. ஏற்கெனவே விவசாயம் மூலமாக சொற்ப வருவாய் கிடைக்கும் பட்சத்தில், தற்போது தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் சூறாவளி காற்று உள்ளிட்ட பேரிடரால் கடும் பாதிப்பை விவசாயிகள் சந்திக்கின்றனர்” என்றனர்.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *