அஸ்ஸாமின் முதல் செய்யறிவு(ஏஐ) ஆசிரியர் ‘ஐரிஸ்’, பாரம்பரிய உடையான ‘மெகேலா சாடோர்’, நகைகள் அணிந்து தனியார் பள்ளி மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹீமோகுளோபின் என்றால் என்ன? என்று மாணவர்கள் கேட்ட கேள்விக்கு மனித உருவ ரோபோ ‘ஐரிஸ்’ விரிவாக பதிலளித்தது.
இதுகுறித்து ராயல் குளோபல் பள்ளி ஆசிரியர் கூறுகையில், கேள்விகள் மாணவர்களின் பாடத்திட்டத்திலோ அல்லது அது எதைப் பற்றியதாக இருந்தாலும், ‘ஐரிஸ்’ எந்த நேரத்திலும் எடுத்துக்காட்டு குறிப்புகளுடன் பதில்களை வழங்குகிறது. ரோபோ ஆசிரியரின் பல்வேறு செயல்பாடுகளை கண்டு மாணவர்கள் அனைவரும் வியப்புடன் கண்டுகளித்தனர்.
Its Remarkable!
With the introduction of AI teacher, the education scenario will get upgraded & enhanced to a great extent. pic.twitter.com/Zm6HDwxWuE
— Pijush Hazarika (Modi ka Parivar) (@Pijush_hazarika) May 27, 2024
கைகுலுக்கல் போன்ற சைகைகளை செய்யும் ரோபோவின் திறனை குழந்தைகள் ரசிக்கின்றனர். இது கற்றல் செயல்முறையை வேடிக்கையாகவும், மாணவர்களை ஈடுபாட்டுடனும் செயல்படவைக்கிறது.
‘ஐரிஸ்’ குரல் கட்டுப்படுத்தப்பட்ட கருவியை கொண்டுள்ளதால், மாணவர்களின் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க உதவுகிறது. செய்யறிவு(ஏஐ) ஆசிரியரிடம் அவர்களின் கேள்விகளுக்கான பதில்கள் இருப்பதால் குழந்தைகள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கல்வி செயல்பாடுகளுக்கு செய்யறிவை(ஏஐ) ஒருங்கிணைப்பதில் ‘ஐரிஸ்’ குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் அளிக்கிறது. ‘ஐரிஸ்’ அறிமுகமானது கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதிலும், மாணவர்களின் மாறுபட்ட கற்றல் பாணிகளை வழங்குவதிலும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்” என்றார்.
நிதிஆயோக்கால் தொடங்கப்பட்ட அடல் டிங்கரிங் லேப் திட்டத்தின்கீழ் மேக்கர்லேப்ஸ் எடுடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
சிறார் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து; ரூ.25,000 அபராதம்: ஜூன் 1 அமல்
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
