Sorting by

×

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேசியத் தலைவர்களின் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், பா.ஜ.க மீது மேற்கு வங்க முதல்வர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

மேற்குவங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டெண்டுலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் கீழ் நாட்டில் உள்ள எந்தவொரு அமைப்பும் நடுநிலையுடன் செயல்படவில்லை. காவி கட்சி அந்த அமைப்புகள் அனைத்தையும் விலைக்கு வாங்கிவிட்டது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

உத்தரப்பிரதேசத்திலிருந்து 50,000 பேர் கொண்ட ஒரு ரயில் நிறைய ஆட்கள் அஸ்ஸாமிற்குக் கொண்டுவரப்பட்டனர். அசாம் தேர்தலில் வெற்றிபெற, அம்மாநில மக்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவதில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால், பா.ஜ.க வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்திருக்கிறது. பாம்பைக் கூட நம்பலாம். ஆனால் பா.ஜ.க-வை நம்பவே கூடாது.

வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டுவரும் அதே உத்தியை மேற்கு வங்கத்திலும் பயன்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது.

இந்த முயற்சி காரணமாகவே பல அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். ஆட்கள், பணம் மற்றும் போதைப்பொருட்கள் ஆகியவை வெளியிலிருந்து கொண்டுவரப்படுகின்றன. ஆனால் எங்கள் தொண்டர்கள் இவற்றை எதிர்த்துப் போராடி நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) போது, ​​90 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஒரு செய்தித்தாள் அறிக்கையின்படி, நீக்கப்பட்ட அந்த 90 லட்சம் பெயர்களில் 60 லட்சம் பெயர்கள் இந்துக்களுடையவை. 30 லட்சம் பெயர்கள் முஸ்லிம்களுடையவை.

அஸ்ஸாமில் வாக்கு சேகரித்த மோடி
அஸ்ஸாமில் வாக்கு சேகரித்த மோடி

அஸ்ஸாமில் நடைபெற்ற தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) திருத்தப் பணியின்போது, ​​பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 19 லட்சம் பெயர்களில் 13 லட்சம் பெயர்கள் இந்துக்களுடையவை. 6 லட்சம் பெயர்கள் முஸ்லிம்களுடையவை. பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பெயர்களில் பல பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் அடங்கும். பா.ஜ.க-வை ஒருபோதும் நம்பக்கூடாது.

எனது தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி உங்களுக்கு வேண்டும் என்றால், அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர் நானே எனக் கருதி வாக்களியுங்கள். இங்குள்ள மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உணவருந்துகிறார்கள். ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அத்தகைய சூழல் இல்லை.

பீகார் மாநிலத்தில் மீன் உண்பதற்கு அனுமதி இல்லை. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *