“ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும். ஈரானின் புதிய அரசாங்கத்தோடு பேசி வருகிறேன்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிக்கடி கூறி வருகிறார்.
அமெரிக்கா, இஸ்ரேல் – இரண்டு நாடுகளும் ஈரான் மீது போர் தொடுத்ததற்குக் காரணம் ‘ஈரானின் ஆட்சி மாற்றத்திற்காகத்தான்’ என்பது இப்போது நன்கு தெரிகிறது.
ஈரான் மீது அமெரிக்கா போர் நடத்துவது அமெரிக்காவில் இருக்கும் பலருக்குப் பிடிக்கவில்லை.
அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்க்கும் இந்தப் போரில் விருப்பமில்லை என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், ட்ரம்பின் சொந்த குடும்பத்தில் இருந்தே ஒரு குரல் வந்திருக்கிறது.
ட்ரம்பின் அண்ணன் மகள் மேரி எல். ட்ரம்ப். இவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது…
“டொனால்ட் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்தான். ஆனால், அது ஈரானில் இல்லை. அமெரிக்காவில்” என்று பதிவிட்டுள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
