Sorting by

×

ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்.

ஒரு நாட்டின் உச்ச தலைவரை சாய்ப்பது அவ்வளவு எளிதா… என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதற்கான பதிலைப் பல செய்தி அறிக்கைகள் தருகின்றன. அதன் தொகுப்பு இதோ…

Financial Times – பல ஆண்டுகளாகவே, ஈரான் முக்கிய தலைவர்களைக் கண்காணிக்கத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிசிடிவி டிராபிக் கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அந்த கேமராக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.

ஈரான் போர்
ஈரான் போர்

British Daily – அப்படி ஹேக் செய்யப்பட்ட கேமராக்களில் ஒன்று – டெஹ்ரானின் முக்கிய வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கிறது.

அந்த டிராபிக் கேமரா வழியாக தான், காமேனி சம்பவம் நடந்த அன்று ‘எங்கே இருந்தார்?’ என்பதை இஸ்ரேலும், மத்திய புலனாய்வு அமைப்பும் (CIA) சரியாக கணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Reuters அறிக்கை படி, இஸ்ரேலின் உளவுத் துறை, சனிக்கிழமை காலை, டெஹ்ரானில் முக்கிய வளாகத்தில் மீட்டிங் நடப்பதை தெரிந்துகொண்டு தான், அங்கே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக, சி.ஐ.ஏ காமேனி அந்தச் சந்திப்பில் தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தது என்று சொல்கிறார்கள். ஆக, சிசிடிவி கேமரா தான் காமேனியின் கொலையில் முக்கிய உளவாளியாக இருந்துள்ளது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *