Sorting by

×

தமிழ்நாட்டில் தேர்தல் வர இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் தான் இருக்கிறது.

அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் எப்படி பரபரப்பாக இருக்கிறார்களோ… ஆங்காங்கே தென்படுகிறார்களோ… அதே அளவுக்கு தினமும் பறக்கும் படையினரை சாலைகளில் சந்தித்து வருகிறோம்.

தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், தனிநபர் ரூ.50,000-க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பது பொது விதி.

2014-ம் ஆண்டு முதலே, ரூ.50,000 தான் லிமிட். ஆனால், 2014-ம் ஆண்டும், 2026-ம் ஆண்டும் ஒன்றா என்கிற கேள்வி இங்கே எழுகிறது.

பணம்
பணம்

இப்போது ஒரு பவுன் தங்கத்தின் விலையே ரூ.1 லட்சத்திற்கு மேல். வீட்டில் விசேஷம் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.50,000 எடுத்து சென்றா, நகை வாங்க முடியும். நகை மட்டும் அல்ல, விஷேச வீட்டுகளில் பொருள்கள் வாங்வதற்க அதிக பணம் தேவைப்படுகிறது.

அது மாதிரி, அனைத்து நேரங்களிலும் கையில் இருக்கும் பணத்திற்கு ரசீது வைத்திருக்கவும் முடியாது.

இதெல்லாம் இல்லாமல், பறக்கும் படையினர் பணத்தைப் பறிமுதல் செய்துவிட்டால், மக்கள் அடுத்து என்ன செய்வார்கள்… எங்கே போய் அலைவார்கள்?

அதனால், இன்றைய சூழலில் ரூ.50,000 என்கிற லிமிட்டை கட்டாயம் தேர்தல் ஆணையம் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வியாபாரிகள், சந்தைக்கு சென்று வரும் விவசாயிகள் என பலரும் முன்வைத்து வருகிறார்கள்.

மக்களே… இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்… அதிக பணம் எடுத்து சென்று, நீங்கள் சந்தித்த பிரச்னை என்ன… எத்தனை ரூபாய் வரை பணம் எடுத்து செல்ல அனுமதிக்கலாம்.. என்பதை கமென்டில் சொல்லுங்க மக்களே.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *