இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை தொடக்கத்தில் எழுச்சி பெற்றாலும் இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 667 புள்ளிகளை இழந்தது.
பங்குச்சந்தை வர்த்தகத்தில் நேற்று (மே.28) சென்செக்ஸ் 75,170.45-ல் முடிவடைந்தது. இன்று காலை 74,826.94-ல் துவங்கிய சென்செக்ஸ் பங்குகளின் விற்பனையால் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனாலும், வர்த்தக இறுதியில் 667.55 புள்ளிகளை இழந்து 74,502.90-ல் நிறைவடைந்தது. சென்செக்ஸில் ஐடிசி, சன் பார்மா, பாரதி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டாலும் ஐசிஐசிஐ மற்றும் எஹ்டிஎஃப்சி வங்கிகள், இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தது.
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல்… மறக்கக்கூடாத 5 விஷயங்கள்!
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, நேற்றைய வா்த்தக இறுதியில் 22,888.15-இல் முடிவடைந்தது. இன்றைய வா்த்தகத்தின்போது 22,762.75-ல் துவங்கியது. 80 புள்ளிகள் வரை உயர்வைக் கண்ட நிஃப்டி ஏற்ற, இறக்கங்களுடன் தள்ளாடி 22,825.50 வரை உச்சம் கண்டது.
ஆனால், வர்த்தக முடிவில் 183.45 புள்ளிகள் இழந்து 22,704.70-ல் நிறைவடைந்தது. நிஃப்டியில் ஹிண்டல்கோ, அதானி போர்ட்ஸ், ஐடிசி நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தாலும் ஐசிஐசிஐ மற்றும் எஹ்டிஎஃப்சி வங்கிகள், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது.
கடந்த வாரம் பங்குச்சந்தை மதிப்பு வரலாறு காணாத உச்சத்திற்கு சென்ற நிலையில், இரண்டு நாள்களாக இறக்க முகமாக உள்ளது. இருப்பினும், அடுத்தடுத்து வரும் நாள்களில் சந்தை மீண்டு விடும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர் முதலீட்டாளர்கள்!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
