அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது போரைத் தொடங்கியது.
அப்போது இந்த இரு நாடுகளும் வேறு எந்த நாட்டுடனும் கலந்து பேசவில்லை. தன்னிச்சையாகவே போருக்குள் நுழைந்தனர்.
ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது ஐரோப்பா, நேட்டோ நாடுகள் ஈரான் போரில் உதவவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்.
இவர் ஈரான் போர் செலவுகளை அரபு நாடுகளை ஏற்க சொல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
மேலும், நேட்டோ நாடுகளைத் தொடர்ந்து ‘காகிதப் புலி’ என்று ட்ரம்ப் சாடி வருகிறார்.

கெய்ர் ஸ்டார்மர் பதிலடி
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
“என் மீதும், பிறர் மீதும் எவ்வளவு அழுத்தம் போடப்பட்டாலும், எத்தனை சத்தங்கள் வந்தாலும். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் பிரிட்டிஷ் நலன் சார்ந்தே இருக்கும்.
அதனால்தான், இந்தப் போர் நம்முடைய போர் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். மேலும், யாராலும் இந்தப் போருக்குள் நம்மை இழுத்துவிட முடியாது”.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
