கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானைத் தாக்கத் தொடங்கின.
முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.
இந்தப் போர் இன்னும் முடிந்தபாடில்லை… தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அமெரிக்காவையும், இஸ்ரேலையும் தாக்க முடியாத ஈரான், அவர்களைப் பழிவாங்க தங்களைச் சுற்றி இருக்கும் அரபு நாடுகளைத்தான் தாக்கி வருகின்றது.
செலவுகள்…
இந்தப் போர் முடிவுக்கு வர ஈரான் வைக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று – ‘இந்தப் போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளை சமன் செய்ய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’.
இன்னொரு பக்கம், இந்தப் போரினால் அமெரிக்காவும் பல சேதங்களைச் சந்தித்துள்ளது… அதிக செலவுகளும் ஆகியுள்ளன.
இந்தச் செலவுகளை ஈடுசெய்ய அரபு நாடுகளிடம் இருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பணம் கேட்பாரா என்று நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.
பதில்
இந்தக் கேள்விக்கு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்புச் செயலாளர் கரோலின் லீவிட், “ஈரான் போர் செலவுகளை ஈடு செய்ய அரபு நாடுகளை அழைப்பதில் அதிபர் ஆர்வாமாகத்தான் உள்ளார்.
இப்படி ஒரு ஐடியா அவருக்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால், இது குறித்து மேலும் அவரே உங்களிடம் தெரிவிப்பார்” என்று பதிலளித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போருக்கு அரபு நாடுகள் காசு கட்டப் போகின்றனவா?
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
