Sorting by

×

ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாகப் சுற்றி வருகின்றன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை, சில வாரங்களாகக் கிராமப் பகுதிகளில் சுற்றி வருகிறது. கடந்த 15 நாட்களில் ஒற்றை யானை தாக்கியதில், 2 பேர்உயிரிழந்தனர்.

இதனிடையே, அலசெட்டி கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பா (39) என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் சென்றபோது, யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால், வழியில் அவர் உயிர்இழந்தார். அவரது குடும்பத்துக்கு வனத் துறை சார்பில் ரூ.50 ஆயிரம்நிவாரணத்தை வனப் பாதுகாவலர் கார்த்திகேயனி வழங்கினர்.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *