Sorting by

×

சென்னை: தமிழகத்தில் கடும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 6-ம் தேதிக்கு பதிலாக பள்ளிகள் ஜூன் 10-ம் தேதி திறக்கப்படும் என்று கல்வி துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதில், 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், ரம்ஜான் பண்டிகை மற்றும் மக்களவை தேர்தல் காரணமாக அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் தேதி மாற்றப்பட்டு ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் நடத்தப்பட்டு, அதன்பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *