Sorting by

×

தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 19-ஆம் தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், அனைத்து துறைகளும் தயாராக இருக்கவும், அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (மே. 15) மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *