கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் பள்ளி மாணவிமர்ம மரண வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் பிளஸ்-2 மாணவி 2022 ஜூலை 13-ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜூலை 17-ல் பள்ளியில் பெரிய அளவில் கலவரம் வெடித்து, உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
