Sorting by

×

கோவில்பட்டி: கயத்தாறு சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லாததால் அரசு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6.50 மணிக்கு நாகர்கோவிலுக்கு 676 என்ற வழித்தடம் எண் கொண்ட அரசு பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்து இரவு சுமார் 7.35 மணிக்கு கயத்தாறு சுங்கச்சாவடியை அடைந்தது. ஆனால், அரசு பேருந்து ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை எனக் கூறி பேருந்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்தி வைத்தனர். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இறங்கி சென்று சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கண்டிப்பாக ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இருக்கும். நீங்கள் சரியாக பாருங்கள் என்று கூறினர்.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *