Sorting by

×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீவிர இந்துத்துவா தலைவர் என்றும் அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக இந்து அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்ட கரசேவையை ஆதரித்தார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்த கருத்து அதிமுகவை கொதிப்படையச் செய்திருக்கிறது. ‘அண்ணாமலையின் கருத்து ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி’ என்று அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் ‘‘ ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கைஉண்டு; ஆனால், மத நம்பிக்கை கிடையாது’’ என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்.

சசிகலாவின் நெருங்கிய உறவினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் கூறுகையில், ‘‘ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை சொன்னதில் தவறில்லை. இந்துத்துவா என்பது வாழ்வியல் முறை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. எல்லா மதங்களையும் அரவணைத்து செல்வதுதான் இந்துத்துவா. அதேபோல் 1984-ம் ஆண்டு ஜெயலலிதா எம்.பி.யாக இருந்தபோது காஷ்மீருக்கு 370-வது பிரிவு வேண்டாம் என்று தெரிவித்தார். ராமர் கோயில் கட்டுவதற்கு பாகிஸ்தானிலா கட்ட முடியும்; இங்குதான் கட்டமுடியும் என பேசி ஆதரவாக இருந்தார். ஜெயலலிதா தெய்வ பக்தி மிக்கவர். பிறந்த மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர். பிறந்த மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மற்ற மதத்தையும் மதிப்பார்கள். ஜெயலலிதா தான் இந்து என்பதை அவரே சொல்லியுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *