Sorting by

×

கரூர்: கரூர் சுங்கவாயிலை தொடர்ந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்காக நிழல் தரும் வகையில் தகர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நிகழாண்டு கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். இதையடுத்து போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் கடும் வெப்பத்தால் பாதிப்புக்குள்ளாகினர். சிக்னலில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருடன் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வரும் முதியவர்கள், பெண்கள் சிக்னல்களில் காத்திருக்கும் மிகுந்த சிரமமடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளை வெயில் கடுமையில் இருந்து பாதுகாக்கும் வகையில் பசுமைக் கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *